காமநாயக்கன்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது.

May 2, 2026 - 09:37
 0  53
காமநாயக்கன்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது.கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மகிழ்வோர் மன்ற நிறுவனர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் தலைமை வகித்தார். மகிழ்வோர் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ் முன்னிலை வகித்தார். நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மணிமதிக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர். 

இதில் பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம், திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் கருத்தப்பாண்டி மற்றும் நம் சீனிவாசன், ஜெ. டிவி கேபிள் ராஜு, முத்தமிழ் மன்ற தலைவர் வரகவி முருகேசன், மற்றும் இலக்கியச் சாரல் தினகரன், கம்பன் கழகச் செயலாளர் சரவணச்செல்வன், கல்லூரி பேராசிரியர் நவநீதன், மகிழ்வோர் மன்ற காப்பாளர்கள் சேர்ம துரை மற்றும் துரைராஜ், ஆசிரியர்கள் அருணாசலம் மற்றும் கனகராஜ், இளையரசனேந்தல் உதவி தலைமை ஆசிரியர் முருகசரஸ்வதி மற்றும் விநாயக சுந்தரி உள்ளிட்ட பலர் பங்கேற்றுத் தலைமை ஆசிரியரைப் பாராட்டி வாழ்த்தி பேசினர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0