உழைப்பாளர் தினம் மற்றும் நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு கோடைகாலத்தில் கோவில்பட்டி இனாம்மணியாச்சியில் பொதுமக்களுக்கு தாகம் தீர்த்த அஜித் ரசிகர்கள்*
பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இலவசமாக நீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினர்
உழைப்பாளர் தினம் மற்றும் நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகில் அஜித் ரசிகர்கள் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர், மோர்,குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்கள், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இலவசமாக குடிநீர், மோர்,குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை அஜித் ரசிகர்கள் வழங்கினர். கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் கோடைகாலத்தில் அவதிப்பட்டு வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் எடுத்துள்ள முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0